நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனக் கோரி சிபிஎஸ்சி மாணவர்கள் தர்ணா

நீட் தேர்வின் அடிப்படையிலே இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு நடைபெற வேண்டும் எனவும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என நீட் தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த சில மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீட் தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு இந்த ஆண்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க டெல்லி வரை சென்று கோரிக்கை விடுத்து வந்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற நீட்டுக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய மாணவர்களின் கருத்துக்களையும் இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். 



நீட் தேர்வுக்காக பல பயிற்சி வகுப்புகள் எடுத்து படித்துள்ளோம். தற்போது நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒருசிலரின் கருத்துகளை வைத்து பேசக்கூடாது.

நீட் தேர்வின் அடிப்படையில் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டும். உடனடியாக நீட் தேர்வின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்' என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...