அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் விநியோகம்


அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வரும் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலமாக வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் பெறுவதற்குறிய வழிமுறைகள்:-

விண்ணப்பங்கள் பெறம் மாணவ, மாணவியர்கள் (ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் மற்றும் இத வகுப்பினர்) கல்வித் தகுதி சான்றிதழ், கல்வி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்று மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி:-

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.இ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.எஸ்.சி (அக்ரி), பி.வி.எஸ்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும்.

வயது வரம்பு: (01.08.2018)

1. அனைத்து வகுப்பினருக்கும் குறைந்த பட்ச வயது வரம்பு 21

2. அதிக பட்ச வயது இதர வகுப்பினர் 32. மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து கீழ்க்கண்டவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

3. ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றம் பழங்குடியினர் 5 வருடம்

4. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் 3 வருடம்

5. மாற்றுத் திறனாளிகள் 10 வருடம்.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவர்.

விண்ணப்பங்கள் திரும்ப ஒப்படைக்க கடைசி நாள் 20.9.2017 மாலை 5.45 மணி.

விண்ணப்பங்களை கீழ்க்கண்ட அலுவலகத்தில் நேரில் பெற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரில் ஒப்படைக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்களை கோரினாலோ அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைத்தாலோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், இந்த வருடம் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் Offline-யில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.

பூர்த்தி செய்து மீண்டும் ஒப்படைக்கும் இடம் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...