காட்டு நாய்களால் வேட்டையாடப்பட்ட மான்- இறைச்சியை கைப்பற்றிய வேட்டையர்கள் கைது

கோவை மாவட்டம், மாங்கரை அடுத்துள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள், யானைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...