கோவை வழியாக வரும் அக்டோபர் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை எக்மோர் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - சென்னை எக்மோர் வரையும், எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூர் மற்றும் பனஸ்வாடிக்கும் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எக்மோரில் இருந்து எர்ணாகுளத்துக்கு வரும், 26ம் தேதி மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எக்மோரில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு மறுநாள் காலை 6:45 மணிக்கு வந்தடைகிறது. எர்ணாகுளத்திற்கு காலை 10:45 மணிக்கு செல்கிறது. 

அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22, 29-ம் தேதிகள், செப்டம்பர் 12, 19, 26-ம் ஆகிய தேதிகளில் சென்னை எக்மோர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6:30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 11:45-க்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செப்டம்பர் 9, 13, 20, 27ம் ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 4:30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு, 8:25 மணிக்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு வரும் 27ம் தேதி, செப்டம்பர் 3, 10 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு பனஸ்வாடி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 12:45 மணிக்கு இந்த ரயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...