கோவை வழியாக வரும் அக்டோபர் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை எக்மோர் - எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம் - சென்னை எக்மோர் வரையும், எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூர் மற்றும் பனஸ்வாடிக்கும் கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எக்மோரில் இருந்து எர்ணாகுளத்துக்கு வரும், 26ம் தேதி மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எக்மோரில் இருந்து இரவு 11:40 மணிக்கு புறப்படும் ரயில், கோவைக்கு மறுநாள் காலை 6:45 மணிக்கு வந்தடைகிறது. எர்ணாகுளத்திற்கு காலை 10:45 மணிக்கு செல்கிறது. 

அதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து வரும் 22, 29-ம் தேதிகள், செப்டம்பர் 12, 19, 26-ம் ஆகிய தேதிகளில் சென்னை எக்மோர்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6:30-க்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 11:45-க்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செப்டம்பர் 9, 13, 20, 27ம் ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அலுவா, பாலக்காடு, கோவை, திருப்பூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 4:30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு, 8:25 மணிக்கு வந்தடைகிறது. 

எர்ணாகுளத்தில் இருந்து பனஸ்வாடிக்கு வரும் 27ம் தேதி, செப்டம்பர் 3, 10 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 8:15 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 8:00 மணிக்கு பனஸ்வாடி சென்றடைகிறது. இந்த ரயில் கோவைக்கு இரவு 12:45 மணிக்கு இந்த ரயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...