வேலை வாங்கித் தருவதாக மோசடி- காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார்

வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், ராம்நகர் பகுதியில் இயங்கிவரும் ஜெனிக் கம்யூனிகேசன் என்னும் தனியார் நிறுவனம் படித்த மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாகியும் வேலை வாங்கித் தராமல் நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு, பயிற்சிக்கு மட்டுமே தொகை வசூலிக்கப்பட்டதாகவும், வேலைஅளிக்கும் நிறுவனங்களில் தாங்களாகவே வேலை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் அலட்சியமாக ஜெனிக் கம்யூனிகேசன் நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ஜெனிக் கம்யூனிகேசன் நிறுவனத்தினர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தனர். ஆனால் தற்போது வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளரிடம் முறையிட்டதற்காக, நாங்கள் இணைந்து உரிமையாளரை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் எங்களை மிரட்டி வருகிறார்.

எனவே, தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செலுத்திய பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...