வேலை வாங்கித் தருவதாக மோசடி- காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார்

வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், ராம்நகர் பகுதியில் இயங்கிவரும் ஜெனிக் கம்யூனிகேசன் என்னும் தனியார் நிறுவனம் படித்த மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாகியும் வேலை வாங்கித் தராமல் நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு, பயிற்சிக்கு மட்டுமே தொகை வசூலிக்கப்பட்டதாகவும், வேலைஅளிக்கும் நிறுவனங்களில் தாங்களாகவே வேலை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் அலட்சியமாக ஜெனிக் கம்யூனிகேசன் நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ஜெனிக் கம்யூனிகேசன் நிறுவனத்தினர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தனர். ஆனால் தற்போது வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளரிடம் முறையிட்டதற்காக, நாங்கள் இணைந்து உரிமையாளரை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் எங்களை மிரட்டி வருகிறார்.

எனவே, தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செலுத்திய பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...