கோவையில் இந்து முன்னணி பிரமுகர் விஷமருந்தி தற்கொலை



கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (36). இந்து முன்னணி பிரமுகரான இவர் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கழிவறையை சுத்தம்  செய்யும் ரசாயனத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை செய்துகொண்ட ரஞ்சித்குமார், இந்து முன்னணியின் மாநகர செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலையின் போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்த குமாரின் சகோதரர் ஆவார். 

முன்னதாகவே, போலீசார் தன்னை சசிகுமார் கொலையில் சந்தேகிப்பதாக கூறி வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இந்த நிலையில், மூன்றாவது முறையாக தற்கொலை செய்ய முயற்சித்தபோது ரஞ்சித்குமார் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​ 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...