கோவை மாநகராட்சி சார்பாக செவிலியர்களுக்கு டெங்கு நோய் ஆரம்ப குறிப்புகள் பற்றி மேலாண்மை கருத்தரங்கம்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 23) கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் நேமிநாதன், அரசு மருத்துவமனை செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, டெங்கு நோயின் ஆரம்ப குறிப்புகள் மேலாண்மை கருத்தரங்கம் நடத்தினார்கள்.

இந்த கருத்தரங்கத்தில், காய்ச்சலை எவ்வாறு பிரித்து கண்டறிவது, எந்த வகை காய்ச்சலை தொடர் சிகிச்சைக்காக உயர் மையத்திற்கு அனுப்புவது, காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஐசியு-வில் உரிய சிகிச்சை மேற்கொள்ளுவது என்பது பற்றி மருத்துவர் நேமிநாதன் பல்வேறு ஆலோசனைகளை செவிலியர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...