பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து பதவி விலகிய கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் முதன்மை செயல் அலுவலர்

கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி மாநில அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஆர்.சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...