கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கிய டி.டி.வி.தினகரன்-யின் கொடும்பாவி எரிப்பு

அதிமுக-வில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை அக்கட்சியின் துணை பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டு தற்போது நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார்.

ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து இன்று டி.டி.வி.தினகரன் நீக்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி.தினரனின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் திரண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...