கட்சிப் பதவியில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நீக்கிய டி.டி.வி.தினகரன்-யின் கொடும்பாவி எரிப்பு

அதிமுக-வில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை அக்கட்சியின் துணை பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டு தற்போது நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார்.

ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து இன்று டி.டி.வி.தினகரன் நீக்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி.தினரனின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் திரண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...