காவல் துறையினர்களுக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு அரங்கில் துவக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறையினர்களுக்கான 57-வது தடகள போட்டி இன்று துவங்கியது. வரும் புதன் கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை நேருவிளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான 57-வது தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த தடகள போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.

இந்த தடகள போட்டிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில், ஆயுதப்படை, அதிரடிப் படை, சென்னை பெருநகரம், வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். 

ஆண் காவலர்களுக்கு 23 வகையான தடகள போட்டி, பெண் காவலர்களுக்கு 19 வகையான தடகள போட்டிகள், மூத்த காவல் துறையினருக்கு தனியாக தடகள போட்டிகள் என மொத்தம் 60 தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றது.

தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் ஆயுதப் படை அணியினர் 17 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மத்திய மண்டலம் 11 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...