காவல் துறையினர்களுக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு அரங்கில் துவக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறையினர்களுக்கான 57-வது தடகள போட்டி இன்று துவங்கியது. வரும் புதன் கிழமை வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை நேருவிளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான 57-வது தடகளப் போட்டிகள் இன்று துவங்கியது. இந்த தடகள போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.

இந்த தடகள போட்டிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில், ஆயுதப்படை, அதிரடிப் படை, சென்னை பெருநகரம், வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய ஆகிய 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 320-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். 

ஆண் காவலர்களுக்கு 23 வகையான தடகள போட்டி, பெண் காவலர்களுக்கு 19 வகையான தடகள போட்டிகள், மூத்த காவல் துறையினருக்கு தனியாக தடகள போட்டிகள் என மொத்தம் 60 தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றது.

தற்போது வரை நடைபெற்ற போட்டிகளில் ஆயுதப் படை அணியினர் 17 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், மத்திய மண்டலம் 11 பதக்கங்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...