டி.டி.வி. தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி



டி.டி.வி.தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார் எனவும் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிச் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நாங்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளை டி.டி.வி.தினகரன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகின்றார். இது செல்லாது. தினகரன் உத்திரவிற்கு அதிமுக கட்டுப்படாது. தனியாக தினகரன் பேரவை என துவங்கி அதில் உள்ளவர்களை நீக்கட்டும்.

தினகரன் திமுக-வுடன் உறவு வைத்துக்கொண்டு செயல்படுகின்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். நாஞ்சில் சம்பத் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மேகதாது விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டனர். தினகரனால் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் எதுவும் செல்லாது". இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...