கோவை மாவட்டத்தில் 36 செ.மீ. மழை மழை பதிவு

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநகரின் பல இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று 36 செ.மீ. மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழையின் அளவு பின்வருமாறு :- 

அன்னூர் - 2 மி.மீ 

பீளமேடு - 4.20 மி.மீ 

மேட்டுப்பாளையம் - 4.20 மி.மீ

பொள்ளாச்சி - 20.00 மி.மீ

பெரியநாயக்கன்பாளையம் - 4.00 மி.மீ

சூலூர் - 5.00 மி.மீ

வேளாண் பல்கலை - 12.80 மி.மீ

வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகள் - 300 மி.மீ

கோவை தெற்கு - 8.50 மி.மீ 

மொத்தம் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவாக 30.06 மி.மீ மழை கோவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...