மின்கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் கறவை மாடு பலி

கோவை மாவட்டம், பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன், செல்வி. ஒரு கறவை மாட்டினைக் கொண்டு அதன் மூலம் பெறப்படும் பாலினை விநியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.



இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.  

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...