மின்கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் கறவை மாடு பலி

கோவை மாவட்டம், பனைமரத்தூரைச் சேர்ந்த தம்பதியர் மனோகரன், செல்வி. ஒரு கறவை மாட்டினைக் கொண்டு அதன் மூலம் பெறப்படும் பாலினை விநியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மனோகரனின் மாடு புற்களை மேய்ந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, அந்த சாலையோரத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மாட்டின் உடல் அதன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே கறவை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.



இது குறித்து மனோகரன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக அன்றாடம் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சென்று வருவர். இந்நிலையில், இன்று டின்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மாடு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அசம்பாவிதமாக மனிதர்களுக்கு இதுபோன்று நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். பள்ளிக் குழந்தைகளின் உயிர்களுக்கும் உத்திரவாதமில்லை. மின்சார வாரியத்துறையினர் மாதம் ஒரு நாள் மின்சார துண்டிப்பு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், அது முறையாக நடைபெறுவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

இதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரியத்துறையினர் மற்றும் பணியாட்கள் அப்பகுதி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி நின்றனர்.  

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...