தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஜவஹிருல்லா, தலைவர்-மனித நேய மக்கள் கட்சி


ஆளுநர் வித்யாசாகர்   ராவ்வை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் சந்தித்து  சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்தார்.

மியான்மர் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அம்னிஸ்டி சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக மியான்மர் ராணுவம் ரோகிந்தியா பகுதியில் முஸ்லீம்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சுவான் சுகி மியான்மருடைய அதிபராக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இனப்படுகொலைகள்

நடத்தப்படுவதாகவும், சர்வதேச நாடுகள் இந்த படுகொலைகள் குறித்து அமைதிகாத்து வருவதாக கூறியவர், இந்தியா அரசு உடனடியாக மியான்மரை கண்டிக்க வேண்டும் என்றவர் மியான்மர் உடனான தூதரகத்தை திரும்பபெறவேண்டும் என்றார். மேலும்.இது குறித்து ஐ நா மனித உரிமை அமைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஜவஹிருல்லா தெரிவித்தார். 

இன்று காலை திமுக, சிபிஎம், விடுதலை. சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக பொறுப்பு  ஆளுநரை பார்த்து சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும்  எடப்பாடி அரசின் மீது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை  நடக்க உத்திரவிட கூறியதாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காகவும், அரசியல் அமைப்பை காப்பதற்காகவும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...