ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது: வட்டார போக்குவரத்து அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல்  ஓட்டுனர் உரிமம் வைத்துக்கொண்டு தான் வாகனம் ஓட்டவேண்டும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உதரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் அசல் ஓட்டுநர் உரிமம் திட்டத்தை ரத்து செய்தார்.

இதனிடையே, ஒருசிலர் அசல் ஓட்டுனர் உரிமத்தை தவறவிட்டு, நகலினை பயன்படுத்தி வருவர். அவ்வாறாக தவறவிட்ட அசல் ஓட்டுனர் உரிமத்தை எப்படி பெறுவது ? என்பது குறித்து கோவை (மத்திய) வட்டார போக்குவரத்து  அலுவலர் உதயகுமார் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:- 

ஒருவரின் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர், அதற்கான சான்றிதழை சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் மீண்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். 

தற்போது, ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால்  காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டியது இல்லை. இணையதளம் வழியாக புகார் அளித்து அதற்கான சான்றிதழையும் பெற முடியும். அந்த சான்றிதழை அந்தந்த பகுதி வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைப்பதன் மூலம் மீண்டும் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல்துறையினரின் இணைய சேவை மூலமாக புகார் அளிக்கும் வசதியை இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...