ஆர்எஸ்.புரம் சாலையில் வேருடன் விழுந்த ராட்சத மரம்

கோவையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதலே, மாநகரின் சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சில பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படத்துடன் மேகமும் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கடும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால், மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின.



சில பகுதிகளில் பழமையான சுவர்களும், மரங்களும் விழுந்தன. இரவு நேரம் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பெரும் அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 

இதனிடையே, ஆர்.எஸ்.புரம், டி.பி சாலையில் ஏராளமான பழமையான நாட்டு மரங்கள் உள்ள நிலையில் மழையின் காரணமாக மண் தளர்ந்திருந்ததால் இன்று பிற்பகல் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் முறிந்து விழுந்தது.



ராஜஸ்தானி அரங்கத்தின் எதிரே, காந்திபார்க்- ஆர்.எஸ்.புரத்தினை இணைக்கும் இந்த முக்கியச் சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.



கோவை நகரத்தின் முக்கிய பகுதியான, போக்குவரத்து மிகுந்த ஆர்.எஸ்.புரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து நீண்ட நேரம் கடந்தும் தொடர்புடைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், விரைந்து மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...