பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து நடத்தும் உள் அரங்கு சைக்கிள் போட்டி

பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டி பெடல்பீட் மையத்தில் நடக்கிறது. சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.  



இந்திய அளவில் உள்அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான மையத்தை சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் பெடல்பீட் ஆகும். உள் அரங்கு சைக்கிள் போட்டியின் மூலம் இருதயம் சீராக இயங்க வழிவகை செய்கிறது.  பொறுமை, உடல்திறன். சீரான உடல்நிலை போன்ற ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. அதோடு, தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை குறைக்கவும் உள் அரங்கு சைக்கிள் போட்டிகள் உதவுகின்றன. 



ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியானது, இருவயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் போட்டிகள், 40 வயதுக்குட்பட்டோர், 40-வயதுக்கு மேற்பட்டோர் என நடக்கிறது. 

கடந்த முறை நடந்த போட்டியில், ஆண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சதீஷும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சுனில் என்பவரும் வெற்றி பெற்றனர். இதேபோல, பெண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் டோரிட்டி கோட்ஜி என்பவரும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சாந்தினி என்பவரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...