மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தனது இல்லத்தில், கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகலறிந்து வந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவுரி லங்கேஷ் உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேஷ் பிரபல கன்னட எழுத்தாளர் லங்கேஷ் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் எம்.எம். கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2008.ம் ஆண்டு  பா.ஜ.க. எம்.பி. பிரஹலாத் ஜோஷி மற்றும் பா.ஜ.க. தலைவர் உமேஷ் துஷி ஆகியோர் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர். 

கவுரி லங்கேஷ்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கவுரியின் மரணத்திற்கு கேரளா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பத்திரிகையாளர் லங்கேஷ் கொல்லப்பட்டதில் நிச்சயம் சதி உள்ளது என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...