கோவையில் பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆணையர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைப்பு

கோவையில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர்.



அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் அங்கிருந்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்தான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமனிடம் நேற்று காலை தொடங்கி மாலை வரை மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், காவல் துறை உதவி ஆணையர் ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...