கோவையில் பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்ட உதவி ஆணையர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைப்பு

கோவையில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர்.



அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் அங்கிருந்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்தான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமனிடம் நேற்று காலை தொடங்கி மாலை வரை மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி விசாரணை நடத்தினார். பின்னர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், காவல் துறை உதவி ஆணையர் ஜெயராமனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...