செப்., 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்- மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் இரண்டாம் திட்டத்தில் செயல்பட்டு வரும் பிரதான குடிநீர் குழாயில் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்படி நாட்களில் கணபதி, காந்திபுரம், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம், புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...