உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவ முகாம்

செப்டம்பர் 8, (இன்று) உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவ முகாம் சரவணம்பட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளை பரிசோதனை செய்து பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

குறிப்பாக, அதிக எடையுள்ள தோள் பையை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு உடல் வலி வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் பிசியோதெரபி மருத்துவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. 

இது குறித்து கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர்.ராஜேஸ் கண்ணா கூறுகையில்:-

குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் உடல் வலிமை மற்றும் உடல் உழைப்பு இல்லாததுதான். அதேபோல் குழந்தைகளை அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கலாம். 

குறிப்பாக மோபைல் போன், வீடியோ கேம், கணினி போன்றவற்றில் விளையாடும் விளையாட்டை தவிர்த்து விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாடும் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களை தடுக்க முடியும். மேலும், இது மனநோயை தவிர்க்கவும் மனிதநேயத்தை வளர்க்கவும் உதவும்' என்று கூறினார்.

முன்னதாக, இந்த முகாமில் கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ராஜா செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் புவனேஸ்குமார், இளவரசி, வினோதினி மற்றும் பலர் இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...