சிதிலமடைந்த நிலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் - வெளியேறுமாறு குடியருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை பிரிவின் மூலம் தவணை முறையிலான சொந்த குடியிருப்புகளும், அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, வழங்கப்பட்ட  குடியிருப்புகளில் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற கோவை வீட்டு வசதிப்பிரிவின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செயற்பொறியாளர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோயம்புத்தூர் வீட்டு வசதி பிரிவின் கீழ் சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தவணை முறையில் வழங்கப்பட்ட 960 அடுக்குமாடி குடியிறுப்புகளும், சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஓதுக்கீடுதாரர்கள் குடியிருந்து வருகின்றனர். 

தற்சமயம், பெறப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் தங்களது வீடுகளை முறையாக பராமரிக்காததாலும், கனமழை பெய்து வருவதாலும் சிதிலமடைந்து, குடியிருக்க தகுதியில்லாத நிலையில் உள்ளது. எனவே, மேற்கொண்ட குடியிருப்புகளை காலி செய்துவிட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்தால் அதனை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இது, தொடர்பாக ஏற்கனவே பலமுறை வீட்டு வசதி வாரிய கோவை பிரிவின் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மூலம் ஒதுக்கீடுதாரர்கள் மேற்கண்ட குடியிருப்புகளை தாங்களாகவே, காலி செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்பிற்கு பின்னரும் காலி செய்ய தவறி தொடர்ந்து குடியிருக்க முயற்சி செய்யும் ஒதுக்கீடுதாரர்கள் தங்களது உடமைக்கோ, உயிருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்களே பொறுப்பு என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கோவை பிரிவின் செயற்பொறியாளர்ஃ நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...