உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஜிப் லைன் சாகச விளையாட்டு

நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேபிள் கார் திட்டம் கானல் நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில், இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 102 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டு, கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு, கமோண்டோ பயிற்சி, தொங்கு பாலம் போன்ற விளையாட்டுகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



 

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் அச்சத்தை போக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...