சேலம் மாவட்ட ஆட்சியர் மீது காலணி வீசிய முதியவர்

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர்.பாஜிபக்ரே பொதுமக்களின் குறைகளுக்கான மனுக்களைப் பெற்று வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த ஒருவர் திடீரென காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாவட்ட ஆட்சியர் தலைமீது ஓங்கி வீசினார். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி சட்டென்று விலகினார். இதனால், அருகில் இருந்தவர் மீது காலணி பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரைப் பிடித்து தாக்கினர். 



சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, அவரின் கன்னத்தில் அறைந்தார். பிறகு, அவரை அடித்து இழுத்துக்கொண்டு சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக இழுத்து சென்றார். இதனால், சற்றுநேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அவர் பற்றி விசாரிக்கும்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவலர்கள் அவர் உண்மையில் மனநோய் பாதிக்கப்பட்டவரா, இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இப்படி செய்துள்ளாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய சொந்த ஊர் ராசிபுரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் ஆசீர்வாதம் செய்வதாக காலணியை கழற்றியிருக்கிறார். பிறகு கைது பண்ணி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது நீதிபதிக்கு முத்தம் கொடுக்கப் போயிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...