'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில் கொள்ளையடித்த 8 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி பழனிசாமி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவரது, மனைவி சாந்தமணி (40). இவர்களுக்கு ஸ்ரீராம் (13), பவதாரணி (10) என்ற மகனும், மகளும் உள்ளனர். தனியார் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சிவக்குமார், கார் மற்றும் இடம் வாங்கி, விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் வழக்கம் போல சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவியிடம், காரில் சென்ற சிலர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி அறிமுகமாகியுள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட அவர்கள், 30 சவரன் நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கை கைப்பற்றிச் சென்றனர். இதையறிந்து, வீடு திரும்பிய சிவக்குமார், வீட்டில் சோதனை நடத்தியது போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை கண்டுபிடித்து போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு, திருப்பூர் மாநகர போலீஸ் துணை ஆணையர் பிரபாகரன், போலீஸ் உதவி ஆணையர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த கைரேகைகளை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், தனிப்படை அமைத்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜெயராம் (வயது 42), கார்த்தி (வயது 38), துளசி சத்குரு (வயது 39), கார்த்தி என்கிற போலீஸ் கார்த்தி (வயது 37), வேணுகோபால் (வயது 48), ரகு (வயது 29), ஆறுமுகம் (வயது 38), முத்துகுமார் (வயது 25) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள், பணம் ரூ. 1,45,000, CCTV DVR, மேலும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் (TN 38 BE 5676) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சிவக்குமார் சூதாட்ட கிளப்புகளில் சென்று சூதாடும் பழக்கம் கொண்டவர். இவர், செல்லும் சூதாட்ட கிளப்புகளுக்கு குற்றவாளி ஜெயராம் என்பவரும் வந்து செல்வார். அங்கு, சூதாட்டத்தின் போது, சிவக்குமார் அதிக அளவில் பணம் வைத்து விளையாடுவதும், அதன் மூலமாக அதிக பணம் சம்பாதிப்பதையும் ஜெயராம் கவனித்து வந்துள்ளார். எனவே, சிவக்குமாரிடம் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிந்துகொண்டு, அதனை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஜெயராமும், அவருடன் சேர்ந்து சூதாட்ட கிளப்பில் சூதாடும் நண்பர்களான கார்த்திக், சத்குரு, வேணுகோபால் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீஸ் கார்த்தி, ரகு, முத்துக்குமார், ஆறுமுகம் ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரின் வீட்டை நோட்டமிட்டு, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இக்கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...