தேசிய கடற்கரை கால்பந்து போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நீலகிரி: கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கடற்கரை கால்பந்து போட்டியில் பங்கேற்கும், தமிழக அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் முதன்முறையாக கடற்கரை கால்பந்து போட்டிகள் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க தமிழகம், குஜராத், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் தேர்வாகியுள்ளன. இதில், விளையாடும் தமிழ்நாடு அணிக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின கடற்கரை கால்பந்தாட்ட வீரர்கள் 4 பேரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் தேர்வாகியுள்ளனர். இதற்கான வீரர்கள் அறிமுகம் கூட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து, வீரர்களை உருவாக்கிய ராமன் ரகுநாத் கூறுகையில், "இதுவரையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மிக சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி, இந்திய கால்பந்து அணியில் பங்கேற்க செய்துள்ளேன். புட்வாலி என்றழைக்கப்படும் போட்டியில் இதுவரை மூன்று வீரர்களை சர்வதேச அளவில் பங்கேற்க செய்துள்ளேன். தற்போது, கடற்கரை கால்பந்து போட்டியில் தமிழக அணிக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்களை தேர்வு செய்ய வைத்துள்ளேன். இது நீலகிரி மாவட்ட மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது," அவர் தெரிவித்தார்.



Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...