குட்கா ஆலை விவகாரம்: தளபதி முருகேசனுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் என்பவரும் ஒருவர். இவர் குட்கா ஆலை செயல்பட உதவியதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முருகேசன், கடந்த மூன்று நாட்களாக சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை. அவரை பற்றி குட்கா ஆலையின் மேலாளர் ரகுராம் அளித்த தகவலின் அடிப்படையில், முருகேசனை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட முருகேசனை போலீசார் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீது சிகரட் மற்றும் புகையிலை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவுகள் மற்றும் ஐ.பி.சி-யில் 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன், முருகேசனை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...