தற்கொலை ஒரு முடிவல்ல ; பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோவை இளைஞர்

கோவை : தற்கொலை ஒரு முடிவல்ல என்று கூறி பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இருபது வயது இளைஞர்.


கோவை : தற்கொலை ஒரு முடிவல்ல என்று கூறி பிளஸ் 2 மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த இருபது வயது இளைஞர்.



புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் இன்பெண்ட்(20). இந்த இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், பாடல் வரிகளை தானே எழுதி, மெட்டுப் போட்டு பாடல் பாடி வருகிறார். 

தேர்வு முடிவுகள் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தற்கொலைக்கு எதிராக பாடல்களை எழுதியுள்ளார். அந்த பாடலில், தேர்வு தோல்விக்கு மரணம் என்பது விடையல்ல என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து இன்பெண்ட் கூறுகையில், "பரிட்சை முடிஞ்சு ரிசல்ட் வரும் போதெல்லாம் மாணவர்கள் தற்கொலை செய்வது நம் நாட்டில் வழக்கம் ஆகிருச்சு. தோல்வியால் தற்கொலைன்னு செய்தியை கேட்டா பதட்டமாக இருக்கும். ஒரு நிமிடத்தில் யோசிக்காமல் உயிரை விடுராங்க. இறப்புக்குப் பின், பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சா அந்த முடிவுக்குப் போக மாட்டார்கள்.

அது மட்டுமல்ல, சுத்தியிருக்கும் சொந்தங்கள், நண்பர்கள் எல்லாருமே வேதனையடைவாங்க. தேர்வுல தோல்வியடைந்தால் மீண்டும் எழுதி பாஸ் பண்ணலாம். அதை நினைக்காமல் தற்கொலை முடிவுக்கு போவது தவறானது. இதைத் தடுக்க ஏதாவது பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு ஆசைப்பட்டு தான் இந்த பாடல் பாடினேன். உயிருங்கிறது ஒரு முறை தான் கிடைக்கும். பரிட்சைகள் எப்போ வேணாலும் எழுதலாம்." என்றார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...