தோல்விகளே வெற்றிக்கு முதல்படி: பிளஸ்-2 தேர்வு தோல்விகளை கண்டு மாணவர்கள் பயக்கக்கூடாது

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனமுடைந்ததால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கோவையில் பிரியா, ஏஞ்சலின் ஜெனிபர் என்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையக் கூடாது என மூத்த மனநல மருத்துவர் என்.எஸ்., மோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மாணவர்கள் பெரும்பாலும் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவர்கள் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மீது கோபத்தை காட்டாமல், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் இருக்கும் பகுதிகள் காற்றோட்டம் இருக்குமாறு ஏற்படுத்த வேண்டும். மேலும், விளையாட்டு போன்றவற்றால் அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

மேலும், மக்கள் அவர்களது தவறுகளை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது, நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலானோர், தோல்விகளை சுவைத்தவர்களே. எனவே, இதனைப் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இளைஞர்கள் ஒரு களிமண்ணை போன்றவர்கள். அவர்களை நாம் வழிநடத்தி எதை உருவாக்க நினைக்கிறமோ..?, அதன் வடிவில் அவர்கள் உருவாவார்கள், என அவர் கூறினார்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு பெற்றோர்கள், சமூதாயம், மீடியாக்கள் மற்றும் அரசு ஆகியவை உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருக்கிறது.

Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...