தேர்வு முடிவுகள் பார்க்க சென்ற மாணவர் மாயம் : பெற்றோர் கண்ணீருடன் புகார்

கோவை : தேர்வு முடிவுகள் வருவதால் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே போன 12 வகுப்பு பள்ளி மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


கோவை : தேர்வு முடிவுகள் பார்க்க வீட்டை விட்டுச் சென்ற 12-ம் வகுப்பு மாணவன் திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.






டி.வி.எஸ்., நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அஸ்வின் பாரிக்கர். சாயிபாபா காலனியில் உள்ள இராமலிங்க செட்டியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனது மதிப்பெண் பார்க்க அவர் காலையிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

மாணவரின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையாளரிடம் மகனை கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க புகார் அளித்தனர். 

இது குறித்து மாணவனின் தந்தை கூறுகையில், "எனது மகன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால், இன்று அவரைத் தேடி பள்ளிக்குச் சென்ற போது தான், அவர் தேர்வு எழுதவில்லை என்ற விபரம் தெரியவந்தது. 

பள்ளி நிர்வாகம் முன்னரே என் மகன் தேர்வு எழுதாத தகவலை தந்து இருந்தால், என் மகனை கவனமாக பார்த்திருப்பேன். இப்போது என் மகனைக் காணவில்லை. அவரை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும்." என்று வேதனையுடன் தெரிவித்தார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...