கோவையில் போலீஸ் மியூசியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.


கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.



கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஹாமில்டன் கிளப்-ஐ தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 60 லட்சம் மதிப்பில் ஹாமில்டன் கிளப் புனரமைக்கப்பட்டது. 



இந்த அருங்காட்சியகத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல், விடுதலை புலிகளுக்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் கடைசல் இயந்திரம், நகர்த்த கூடிய தீயணைப்பு இயந்திரம், ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், இந்திய அரசின் தரைப்படை, கப்பல் படை பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 



தமிழகத்தின் முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த காவலர் அருங்காட்சியகம் இன்று திறப்பு விழா கண்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என்று பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Video: Laxman

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...