பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - மத்திய அமைச்சர்

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 



திருப்பூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் மூலம் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்ட லிவ்லிகுட் தொழில் மையத்தினை பார்வையிட்ட அமைச்சர் கிரி ராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "முதல் முறையாக நிதி நிலையை சீர் செய்ய அமல்படுத்த ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கையால் வரி வசூலானது. வழக்கத்தை விட 100 கோடியைத் தாண்டியுள்ளது. டெக்ஸ்டைல் துறையின் தாய் இடமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் உற்பத்தி 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. 



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பல நவீன முறைகளைப் பின்பற்றி வருகிறது. வரும் 2020-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பின்னலாடைத் துறை மூலம் 62 மில்லியன் வேலை வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இத்துறை இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த துறையாக உருவெடுத்து வருகிறது. மேலும், சிறு குறு வர்த்தகர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதம மந்திரியின் சிறு குறு தொழில்களுக்கான கடன் திட்டத்தின் கீழ், கடன் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதற்காக எந்தவித சொத்து பிணையும் வாங்குவதில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., நிச்சயம் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்கும்." என்றார். 

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...