ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் காலை அறிவியல் கல்லூரியில் 26ம் ஆண்டு விளையாட்டு விழா நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் மகுடபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவிகளின் அணிவகுப்பினை ஏற்று மரியாதையை செய்தார். பின்னர், ஒலிம்பி  திபத்தினை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்:
இன்றைய காலத்தில் பெண்கள் உடல்நலம் பேணுதல் மிக அவசியமான ஒன்று. பெண்கள் இல்லத்திலும், பணியிடத்தில் பல்வேறு பணிகளை  ஆற்றுகின்றனர். அவர்கள் பிறர் துணையின்றி செயல்பட, உடல்நலம் பேணுதல் மிகவும் அவசியம் என்றார். 


ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதர்வர் சித்திரா பேசுகையில்: 
பெண்கள் வாழ்வில் உண்மை, விடாமுயற்சி, வலிமை, ஆளுமைத் தன்மை போன்ற பண்புகளை தக்க வைத்துக்கொண்டால், வெற்றியை நிலைநாட்ட முடியும் என்றார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மகேஸ்வரி அணைத்து விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். அனைத்து போட்டிகளிலும் சிறந்த விளையாட்டு அணியாக இண்டிகோ அணி வெற்றிவாகை சூடியது. அனைத்து போட்டிகளிலும் சிறந்த வீராங்கனை பட்டத்தினை இண்டிகோ அணியின் வீராங்கனை ஜனனி பெற்றார். சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை நீலநிற அணியின் ஜெய ஸ்ரீ பெற்றுக் கொண்டார்.


இறுதியில் மாணவர் மன்றத் துணை செயலர் ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...