ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை சோதனை செய்ய விஎஓ உத்தரவு


ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் பண்டிகைகள் ஆக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கட்டணம் குறைவாக வசூலிக்கும் அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வேறு வழியின்றி பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் ஆம்னி பேருந்துகள், தங்களின் பயணக் கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகளவில் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. வேறு வழியின்றி பயணிகள் அதில் பயணம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் 300 முதல் 400 வரை வசூலிக்கும் ஆம்னி பேருந்து தற்போது 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து தொடர்ந்து வந்த புகாரை அடுத்து வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...