கோவையில் நடைபெற்ற வன்முறையில் மக்கள் பீதியில் உள்ளனர் - கள ஆய்வில் தகவல்

கோவையில் நடைபெற்ற வன்முறையின்  காரணமாக மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளதாக, கள ஆய்வில் ஈடுபட்டுள்ள மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக அமைக்கப்பட்ட உண்மையை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

கோவையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசி குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வளத்தில் கோவையில் பல்வேறு வன்முறை வெடித்தது. இதில் வனிக வளாகங்கள், நிறுவனங்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அடித்து நொருக்கப்பட்டன. துடியலூர் பகுதில்  காவல்துறை வாகனம் மற்றும் இரு கடைகளும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரம் இயல்பாக தோன்றியதா அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்ற உண்மையை கண்டறிய மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 18 பேர் கொண்ட குழு கோவையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் காந்திகிராம் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மார்கண்டன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொது செயலாளர் சமுவேல் ராஜா, வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலவரத்திற்கான காரணம் மற்றும் அதனை காவல்துறை தடுக்க தவறியது குறித்தும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களை சந்தித்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பேசிய மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில பொது செயலாளரும் உண்மை கண்டறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முரளி, வன்முறை சம்பவம் காரணமாக மக்கள் மனதில் தற்போது அச்சம் உள்ளதாகவும், இதில் இருந்து மக்களை மீட்டெடுக்க மக்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

பெரும்பாலான இளைஞர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாகவே தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். சசி குமார் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற பந்த் குறித்தும் மக்கள் சிவில் உரிமை கலகத்தினர் நேற்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடதக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...