பெண்ணிடம் நகை பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மோகனாம்பாள் (36). இவர் சனிக்கிழமையன்று காலை கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். தனபால் லே அவுட் அருகே நடந்து வந்துகொண்டிருந்த போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மோகனாம்பாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த மோகனாம்பாள் கூச்சலிடவே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சில நொடிகளில் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...