இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். 



சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணி, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:

"இந்திய உடல் உறுப்பு தான நாள்" இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முக்கியத்துவத்தை பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் முலம் ஒருவருக்கு உயிர் கொடுக்க உதவுகிறோம் .

இதை இன்றைய இளைய சமுதாயம் முதல் பொது மக்கள் அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார்.



இப்பேரணியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ, முதலைமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பளர்கள் சீனிவாசன், மோகன் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...