கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தலைமையில் இன்று (29.11.2016) துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில்:-  “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (29.11.2016) கோவை மாநகராட்சியும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் இணைந்து மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ முகாம் துவக்கி வைத்ததை துப்புரவு பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசி இந்த மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

இந்த மருத்துவ முகாமை கோவையிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக இணைந்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை “YI” மற்றும் “CII” மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மண்டல வாரியாக உள்ள பள்ளிகளில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தகவலை துப்புரவு பணியாளர்கள் சங்கங்கள் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து துப்பரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்ற இம்மாநகராட்சி நற்பெயர் ஏற்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர்  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், முன்னனி மருத்துவமனைகளான  பி.எஸ்.ஜி, கே.எம்.சி.எச், கே.ஜி, கங்கா, அரவிந்த் கண்மருத்துவமனை, சங்கரா கண்மருத்துவமனை, ராமகிருஷ்ணா, தைரோ கேர், ஜி.கே.என்.எம்,  ஜெம் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களான  ரத்னா ஏஜென்சீஸ், ஐடிசி  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...