சிறந்த மாநகராட்சி சேவைக்காக' டிஜிட்டல் இந்தியா' விருது பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்



மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள குப்பைத் தொட்டிகள், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக என பல திட்டங்கள் டிஜிட்டல் வழியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வுகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மேற்கொண்டார்.

மேலும், பல திட்டங்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து ஏராளமான தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டுவந்துள்ளார்.



இதனை பாராட்டும் வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது 2016 கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

புதுதில்லியில் அமைந்துள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்க்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், கூடுதல் செயலாளர் அஜய்குமார், மத்திய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வெர்மா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அல்கா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா விருதும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை நகர மாநகராட்சி மட்டுமே குடிமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நகரமாகும். இது கோவை வாழ் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். நம்முடைய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் மாநகராட்சியின் மேம்பாட்டில் பங்கேற்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு 26 திட்டம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளது. அக்குழுக்கள் மூலம் தற்போதுவரை 40 திட்டங்கள் குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பல்வேறு கட்ட குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஆகும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...