கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு நகரில் சேகரிப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து குப்பைகளை விரைந்து திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.



இந்நிலையில் இன்று குப்பை கிடங்கின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.



இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.



ஆனால் தீ, அரை ஏக்கர் பரப்பளவிற்குக் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், உடனடியாக கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.



குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.



தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குப்பைகளை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...