கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடைபெற்ற மகளிர் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக “நம்ம ஊரு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பரத நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம், விளையாடுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் பேசுகையில், வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழும் குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக வளர்கிறார்கள். பெண்கள் தங்களின் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுவதும், ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பது மிகச்சிறந்த உழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது, என்றார்.



அவினாசிலிங்கம் கல்லூரி பேராசிரியர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில், அனைவரும் உடற்பயிற்சி செய்வது யோகா பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும், என்றார்.



இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் லயன் சுபா சுப்பிரமணியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அனிதா தேவி மனித வள மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வியறிவு பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்புகளை வழங்கினார்.



இளம் வழக்கறிஞர் அன்பு செல்வம், சட்டம் அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் சோபா நதியா நன்றி உரை நிகழ்த்தினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...