கோவையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவையில் ஆட்டிசம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குமரகுரு கல்லூரி அரங்கில் கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஆட்டிசம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தினர்.



தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் சிறப்பு குழந்தைகள் பாடல் இசையுடன் ஆடிபாடினர். சிறப்பு குழந்தைகளை கைகளை தட்டி பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...