தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது எப்படி..? - கோவையில் போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பிரிவு போலீசாருக்கான பயிற்சி முகாம், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உளவு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு மக்களுக்கு எதிராவும், அரசுக்கு எதிராகவும் வரும், ஒரு சில வேண்டுமென்றே தீவிரவாதத்தை உருவாக்குகின்றனர். இதனை முறையாக நாம் கையாள வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும், புகார் மனுக்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சிலர் தவறான முறையில் வார்த்தை விடுகின்றனர், அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், சோதனைக்கு பின் மக்களிடம் ஒத்துழைப்புக்கு நன்றி செல்ல வேண்டும் இது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். இதனை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இதனை முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...