ரூ.5 கோடி மதிப்பான செம்மரம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முபாரக், கோவை பெரிய கடை வீதியில் காவல் நிலையத்துக்கு வழக்கு விஷயமாக சென்ற போது அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.



கோவை: திருப்பூரில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருப்பூர் அவிநாசி சாலையில் சோதனை செய்த போது அந்த வழியாக செம்மரங்களை ஆறு பேர் கண்டெய்னர் லாரியில் கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

கண்டெய்னரில் முன் பகுதியில் காய்கறி மூட்டைகளை ஏற்றி அதற்கு அடியில் செம்மர கட்டைகளை பதுக்கி இருந்தனர். அதிகாரிகள் விசாரித்த போது திருப்பூர் குங்குமபாளையம் குடோனில் பதுக்கி வைத்து செம்மரங்களை கேரளா கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

குடோனில் சோதனை இட்டபோது அங்கே 9.4 டன் எடையில் செம்மர கட்டைகள் இருந்தன. லாரியில் இரண்டு டன் செம்மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும்.

இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த உஸ்மான் பாரூக், சையது அப்துல்லா காசிம், கோவையைச் சேர்ந்த முபாரக், கண்ணன், அப்துல் ரகுமான் தமிம் அன்சாரி ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஆறு பேரும் தலைமறையாகி விட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு பிரிவினர் போலீசில் புகார் அளித்து 6 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் முபாரக் கோவை பெரிய கடை வீதியில் காவல் நிலையத்துக்கு (பிப்.27) வழக்கு விஷயமாக சென்ற போது இவர் ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...