கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை – கூட்டு முயற்சியை காரணம் என அதிகாரிகள் பெருமிதம்

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் 5 டன் சரக்குகள் ஏற்றி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்,


கோவை: கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். இந்நிலையில் சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணிகளின் இருக்கைகள் குறைவாக புக்கிங் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது.

உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்குகளை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப்பொருட்கள் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும். பொருட்கள் ஏற்றுமதிக்காக வால்வு ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்நிலையில் 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன. கூட்டு முயற்சியால் சாதனை படைத்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் முதல் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 950 டன் முதல் 980 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், ஜவுளிப்பொருட்கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்தை சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...