கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் 43.49 அடியாக உயர்வு: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.49 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக, கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.49 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீர், கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் தற்போது (அக்டோபர் 16) 43.49 அடியாக உயர்ந்துள்ளது.

அண்மையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மழை தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...