கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் 43.49 அடியாக உயர்வு: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.49 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக, கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.49 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீர், கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. மொத்தம் 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் தற்போது (அக்டோபர் 16) 43.49 அடியாக உயர்ந்துள்ளது.

அண்மையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த மழை தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...