கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது ஆணையாளராக பொறுப்பேற்றார். சிவகுரு பிரபாகரன், IAS பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட கட்டா ரவி தேஜா, IAS இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கோவை மாநகராட்சியின் 30-வது ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.