முதலமைச்சரின் கார் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்று மட்டும் உதகையில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இன்று மதியம் உதகையில் மிதமான மழை பெய்தது.



இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக காரின் மூலம் உதகைக்கு இன்று வந்தடைந்தார். இவரது கார், தொட்டபெட்டாவை கடந்த சுமார் 15 நிமிடங்களில் உதகை, கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால், முதலமைச்சரின் கார் அதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மரம் விழுந்த விபத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றிப் போக்குவரத்தை சீர் செய்தனர்.



Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...