கோவை கோட்டை மேடு சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் பிறகு தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீஸார்கள் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோட்டை மேடு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், சதி திட்டம் குறித்தான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை முதல் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அதில் ஒர்ஷாப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற போலீசார் எச்சரித்தனர்.



ஆனால் அதையும் மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...